ஆடு கோழி விலை உயர்வு ஓர் அலசல்
கடந்த இரண்டு வருடங்களாகவே ஆடு மற்றும் கோழி விலை மற்றும் அதன் கறி விலை சற்று வேகமாக உயர்ந்து வருகிறது. வணிகவியல் பேராசிரியர் என்ற முறையில் இதை இரண்டு கோணங்களில் நான் பார்க்கிறேன். ஒன்று இதன் தேவை அதிகமாகிவிட்டது. இரண்டு வளர்ப்பு குறைந்து வருகிறது. இன்று மக்களின் உணவில் அசைவம் என்பது தவிர்க்க முடியாத இடத்தில இருப்பதாகவே நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் முன்பு வரை மக்கள் கோவிலுக்கு அதிகமாக போகவில்லை என்றாலும், நாள் கிழமை பக்தி என்று வாழ்ந்துவந்தனர். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, அமாவசை, கிருத்திகை என்று கடைப்பிடித்து அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். அந்த நாட்களில் அசைவ உணவினை உட்கொண்டால் பெரிய தெய்வ குற்றம் நடந்து விடும் என்ற பயமும் பக்தியும் இருந்தது. இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வாழ்க்கைமுறை மற்றும் மேற்கத்திய கலாச்சார மோகம் என்பது அதீத அளவில் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை மாற்றியுள்ளது. ஆடு, மாடு, கோழி போன்றவை குடும்பத்தில் ஒரு நபராகப் பார்க்கப்பட்ட காலம் போய் அவை உணவாகவும் பணமாகும் பொர...