Posts

Showing posts from March, 2018

இன்றைய கல்விமுறை சரிதானா

எனது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை. அவளுடைய பாடத்தில் மாசுபாடு(Pollution), இணையம்  (internet),  கணிணி  (computer) போன்றவற்றை முட்டாள் வல்லுநர் குழு இணைத்துள்ளது.  தண்ணீர், நிலம், காற்று என்று பிரித்து பார்க்கும் தன்மையே வராத குழந்தைக்கு மாசுபாட்டின் வகைகள், அவைகள் எப்படி, ஏற்படுகிறது, அவற்றை தவிர்க்கும் வழிமுறை என்றெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறது.  நான் கிராமத்தில் வாழ்ந்தவன், நிலம், நீர், காற்று என பிறப்பிலிருந்தே ஒன்றிணைந்து இருந்ததால் அது பற்றித் தெரியும். ஆனால் எனது குழந்தை  நகரத்தில் இருக்கிறது. காலை வீட்டிலிருந்து பள்ளி மற்றும்  பள்ளியிலிருந்து வீடு, இதுதான் வாழ்க்கை. அவளிடம் எனது மனைவி ஆங்கிலத்தில் இந்தக் கேள்வியை புத்தகத்தைப் பார்த்துக் கேட்டார் "What is the source of water?", அதற்கு அந்தப் பிஞ்சுக் குழந்தை "Riva water" என்றது. அதற்கு தர்மஅடி விழுந்தது.  அழுது கொண்டே என்னிடம் அப்பா water Riva companyல் தானே  தயாரிக்கிறார்கள் அப்புறம் ஏன் அம்மா என்னை அடிக்கிறார்கள் என்றது என் குழந்தை கண்ணீருடன்.  அவ...

எங்கே போகிறோம்?

எனது வயது 38. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது கிராமம் பச்சைப் போர்வை போர்த்தியது போல் எங்கு நோக்கினும் பசுமையாகவே இருக்கும். மரங்களும் செடிகளும் நிறைந்த அந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது.  காலையில் பள்ளி செல்லும் போது வயல்களின் வரப்புகளில் நடந்த போது பாதத்தில் பனித்துளி பட்டு ஏற்பட்ட சிலிர்ப்பு இப்போதும் குளிரவைக்கிறது. மதிய உணவுக்கு பள்ளியில் இருந்து பக்கத்து தோட்டத்திற்கு சென்று உணவருந்தி அங்கே உள்ள பழ மரங்களில் குரங்குகள் போல் ஆடிப் பாடிய ஆட்டம் அருமையான நினைவுகள்.  மாலை பள்ளி முடிந்து வீடு வரும் வரை ஒரே கொண்டாட்டம் தான்.