Posts

Showing posts from July, 2018

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

Image
மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்தது. மனிதனின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் உதவியுடனே நடந்துள்ளது. மனிதன் தான் பிறந்த காலத்திலிருந்து நாடோடியாகவும், வேட்டையாடியாகவும் திரிந்தான். தனக்குத் தேவையானவற்றைத் தவிர, நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற உயிர்களைப்போலவே தானும் வாழ்ந்து வந்தான். நடந்து நடந்து ஓய்ந்தவனுக்கு, தான் இருக்கும் இடத்திலேயே உணவு கிடைத்ததால் அவனின் ஓட்டம் நின்றது. அங்கே தான் இயற்கைக்கு அழிவு ஆரம்பம் ஆனது.  ஓடியவன், மற்ற உயிர்களை பிடித்து வைத்தான். தான் வாழ வசதிகள் நிறைந்த இடத்தில் குடிசைகளை கட்டினான். அன்றைக்கு வேண்டும் என்ற எண்ணம் பெருகி நாளைக்கும் என்று எண்ணினான். பசிக்கு வேட்டையாடியவன், சேமிக்க வேட்டையாடினான். தேவைக்கு மேல் சேரும் போது, அவனுக்கு சிறிது சிறிதாக பேராசை தோன்றியது. நீரை சேமித்தான், தானியங்களை சேமித்தான், இவைகளை சேமிக்க சில உலோகங்களையும் மண் பண்டங்களையும் உருவாக்கினான். கடந்த நூற்றாண்டு வரைகூட, மனிதன் சேமிக்க மற்றும் பயன் படுத்த உலோகங்களையும் மண்ணையுமே பயன் படுத்தினான். தொலைக்கா...

உயிரா? மயிரா?

Image
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் என் மேல் சற்று வருத்தமோ, ஐயமோ வந்திருக்கும். என்னடா இவன் படித்தவன், பேராசிரியராக இருப்பவன் இப்படி பண்பில்லாமல் தலைப்பை வைத்திருக்கிறான் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இங்கே சொல்லியிருப்பதில் தவறில்லை. அதைத்  திருக்குறளில் திருவள்ளுவரே சொல்கிறார்.  "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" மயிர் என்பது தான் சரியான தமிழ்ச் சொல். நாம் தான் நாகரிகம் என்ற போர்வையில் சில தமிழ்ச் சொற்களை தவறான வார்த்தைகளுக்குப் பயன் படுத்தி வருகிறோம். சரி நான் சொல்ல வரும் தகவலுக்கு வருகிறேன். ஆடிமாதம், அருமையான குளிர்ந்த காற்று, நல்ல அமைதியான இரவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு ஓய்வு. புதன் (18.07.18) இரவு சரியாக 8.30 மணிக்கு நானும் என் மனைவியும் வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென யாரோ தான் செல்லும் வண்டியில் இருந்து விழுந்த இரைச்சல். நானும் எனது மனைவியும் ஓடிப்போய் பார்த்தோம். கிட்டத் தட்ட அறுபது வயது இருக்கும் பெரியவரும் அவரது மனைவியும் சா...