பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்தது. மனிதனின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் உதவியுடனே நடந்துள்ளது. மனிதன் தான் பிறந்த காலத்திலிருந்து நாடோடியாகவும், வேட்டையாடியாகவும் திரிந்தான். தனக்குத் தேவையானவற்றைத் தவிர, நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற உயிர்களைப்போலவே தானும் வாழ்ந்து வந்தான். நடந்து நடந்து ஓய்ந்தவனுக்கு, தான் இருக்கும் இடத்திலேயே உணவு கிடைத்ததால் அவனின் ஓட்டம் நின்றது. அங்கே தான் இயற்கைக்கு அழிவு ஆரம்பம் ஆனது. 

ஓடியவன், மற்ற உயிர்களை பிடித்து வைத்தான். தான் வாழ வசதிகள் நிறைந்த இடத்தில் குடிசைகளை கட்டினான். அன்றைக்கு வேண்டும் என்ற எண்ணம் பெருகி நாளைக்கும் என்று எண்ணினான். பசிக்கு வேட்டையாடியவன், சேமிக்க வேட்டையாடினான். தேவைக்கு மேல் சேரும் போது, அவனுக்கு சிறிது சிறிதாக பேராசை தோன்றியது. நீரை சேமித்தான், தானியங்களை சேமித்தான், இவைகளை சேமிக்க சில உலோகங்களையும் மண் பண்டங்களையும் உருவாக்கினான். கடந்த நூற்றாண்டு வரைகூட, மனிதன் சேமிக்க மற்றும் பயன் படுத்த உலோகங்களையும் மண்ணையுமே பயன் படுத்தினான்.




தொலைக்காட்சி ஒன்று வந்தவுடன், மனிதனின் மனம் சற்று மாறித்தான் போனது. ஆம். லட்சத்தில் ஒருவர் பயன் படுத்தி வந்த நெகிழி என்னும் பிளாஸ்டிக் சிறிது சிறிதாக மனிதனின் தினப் பயன் பாட்டில் வந்தது. மனிதனின் நாளைய எண்ணத்தில் மிக மிக முக்கியமானது தண்ணீர். தண்ணீரை சேமிக்க பயன் படுத்திய உலோகங்கள் மற்றும் மண் பானைகளின் கனம் மற்றும் பராமரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக  ரப்பர் குடங்களுக்கு  மாற்றியது. ரப்பர் குடங்கள் என்னும் பெயரில் பிளாஸ்டிக் என்னும் அரக்கன் மனிதனை தான் பிடியில் கொண்டு வர ஆரம்பித்தான்.




கையாள்வதும், விலை மலிவும் மனிதனின் மனத்தினைப் புரட்டிப் போட்டது. இதைப் பயன் படுத்திய மேலைய நாட்டினர், இயற்கையோட வாழ்ந்த மனிதனை செயற்கையான பிளாஸ்டிக் பயனாளிகள் ஆக்கிர். வாழை நாரையும், இலைகளையும், மட்டைகளையும் பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு, பிளாஸ்டிக் பொட்டலம் போ ஆரம்பித்தனர். நாம் பயன் படுத்தும் ஷாம்பு முதல் சாமிக்கு போடும் மாலை வரை, இன்று அனைத்துமே பிளாஸ்டிக் உறையில் தான் உள்ளது.




நம் வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கெல்லாம் இலையில் சோறு போட்டு, குவளையில் தண்ணீர் வைத்து மரியாதையை செய்த காலம் போய், பிளாஸ்டிக் இலை மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைப்பதை நாம் பெரிய கௌரவம் என்று கருத ஆரம்பித்து விட்டோம்.  பாட்டிலில் அடைக்கப் படும் தண்ணீர் எவ்வளவு நாட்கள் ஆனதென்று நமக்கு தெரியாது, அவை வெயிலில் வைக்கப் பட்டதா என்று தெறியாது, ஆனாலும் நாம் அதை பயன் படுத்தியே நமது பகட்டை வெளிப்படுத்துகிறோம்.

மனிதனின் சோம்பேறித்தனம் தான் சமைக்கும் உணவிலும் வந்தது. ருசிக்காகவும், வாழ்க்கையின் வேகமான ஓட்டத்திற்காகவும் நெகிழியை பயன்படுத்துவதென்பது மனிதனோடு ஒன்றி விட்டது. காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போது குடிக்க மற்றும் சாப்பிட என அனைத்தும் இன்று பிளாஸ்டிக் தான். மாலை நேரங்களில் இன்று பல வீடுகளில் உணவு கடைகளில் இருந்ததே வாங்கப்படுகிறது.  அவ்வாறு வாங்கும் உணவுகள் பிளாஸ்டிக் கொண்டு கட்டித் தரப்படுகிறது. அது பல எதிர் வினைகளை ஏற்படுத்தும் என்பது அறிந்தாலும் நாம் இன்னும் அதையே தான் செய்து வருகிறோம். இது நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றி வாழும் அனைத்து உயிர்களுக்கும்  கேடாய் முடியும் என்பதை நாம் நினைப்பதில்லை.



நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.


பிளாஸ்டிக்கின் தீமைகள்

பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது.பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.கடல், நீர்நிலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்நெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள்        (100-1000 ஆண்டுகள்)பஞ்சுக் கழிவுகள்          (1-5 மாதங்கள்)காகிதம்                  (2-5 மாதங்கள்)உல்லன் சாக்ஸ்          (1-5ஆண்டுகள்)டெட்ரா பேக்குகள்         (5ஆண்டுகள்)தோல் காலணி            (25-40 ஆண்டுகள்)டயபர் நாப்கின்            (500-800 ஆண்டுகள்)

பிளாஸ்டிக்கை தவிர்த்தல்

மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்து கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது தனியரு சேமிப்பு துணிப்பையை வைத்துக் கொள்ள வேண்டும்.பதப்படுத்தப்பட்ட மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.காப்பர் ஒயர்கள் போன்றவைகளை கண்ட இடத்தில் எரித்தல் கூடாது.பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கேஜிங் பைகள், தொழிற்சாலை லைனர்கள், சுருள்கள், வணிகக் குப்பைகள், மளிகை பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளை உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.இப்பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்தல் பயனற்றதாக உள்ளன. ஒரு பிளாஸ்டிக் பைகளின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடம் மட்டுமே ஆனால் மட்குவதற்கு ஆகும் காலம் அதிகம். பிளாஸ்டிக்  மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மட்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும்.கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90% பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களே காணப்படுகின்றன.தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 
அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் தனக்கென பிளாஸ்டிக் தவிர்ப்பு முறைகளை வைத்துக் கொண்டு  பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியும் என்று நம்முடைய எண்ணம் உருவாக வேண்டும்.பிளாஸ்டிக்கை தவிர்க்கும் போது விவசாய நிலம், மணல்,  நீர்நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும்.பிளாஸ்டிக் இல்லாத நாடாக உருவாக்குவோம் என ஒவ்வொரு குடிமகனும் தனக்கொரு உறுதிமொழியை ஏற்படுத்தி கொள்ளுதல் 
(நன்றி: தமிழ் விக்கிப்பீடியா )

இந்த பிளாஸ்டிக் என்னும் அரக்கனை நாம் அழிக்காவிடில், அவன் நம்மை விரைவில் அழிப்பான் என்பது கண்கூடு. பிளாஸ்டிக் குறித்த விளைவுகளை நாம் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்ததே கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் பேனாக்கள் தூக்கி எறியப்படுபவையாக இருக்கிறது. 

கல்லூரி மாணவர்களை வைத்து ஒரு சிறிய கணக்கொன்றைச்  சொல்கிறேன்.  ஒரு மாணவன் ஒரு பருவத்தில் (semester) 5 பால் பாயிண்ட் பேனாக்களை பயன் படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வகுப்பில் 50 பேர் பயின்றால் 250 refill தூக்கி  எறியப்படும். மூன்று ஆண்டுகளில் மொத்தம் 3000. ஒரு கல்லூரி முழுவதும் சேர்த்தால் குறைந்தது 50000 தூக்கி எறியப்படும். இதற்கு பதிலாக, ink  பேனாக்கள் பயன் படுத்தினால் எவ்வளவளோ பெரிய மாற்றம் கொண்டுவரலாம். அடுத்த தலை முறைக்கு பணம் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அது போல அவர்களுக்கு இயற்கையை சேர்ப்பதும் முக்கியம். 

Comments

Popular posts from this blog

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்