பழனியப்ப தாத்தா எனும் பாலம்
இந்த தலைப்பைப் பார்த்த உடன் நான் ஒரு நபரைப் பற்றி மட்டுமே சொல்லப்ப போகிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல. சரி நான் சொல்ல வரும் தகவலை விவரிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊர் கொங்கர்பாளையம். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம். இங்கு பலதரப்பட்ட மக்கள் வழ்ந்தாலும் ஒற்றுமை என்பது இருக்கும். என் தாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இந்த ஐந்து பேருக்கும் நண்பனாக இருந்து அவர்களுக்குள் வரும் அனைத்து சண்டை சச்சரவுகளை சமாளித்து ஒற்றுமையை ஏற்படுத்திய பொறுப்பில் இருந்தவரே பழனியப்பா தாத்தா. உலகத்தில் எதார்த்தமான மனிதர்கள் இருந்தார்கள் என்றால் அது அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. யார் வீட்டிற்கு வந்தாலும் பாகுபாடில்லாமல் நமது குடும்ப உறுப்பினர் போலவே நடந்து கொள்ளும் பாங்கு அவரின் தனித்தன்மை. அவர் எங்களின் மூன்று தலை முறையோடு பாசமாகவும் பாலமாகவும் இருந்த மாபெரும் மனிதர். அனைவரையும் ஏசாமி என்று அவர் பாசமா அழைக்கும் குரல் இன்னும் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறது. பணம் மற்றும் பொருளுக்கு மதிப்பளிக்க...