Posts

இடிக்கப்பட்டது ஸ்ரீதேவி தியேட்டர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் தூக்கநாயக்கன்பாளையம் என்னும் ஊரில் ஸ்ரீதேவி தியேட்டர் என்ற ஒரு திரையரங்கம் இருந்தது. கிட்டத்தட்ட 1960களில் இருந்து 2010 -2012 வரை இந்த தியேட்டர் தான் இங்குள்ள மக்களுக்கான மிகப்பெரிய ஒரு பொழுதுபோக்கு. எனக்கு நினைவு தெரிந்து 1985ல் நான் பார்த்த முதல் படம் முதல் கிட்டத்தட்ட 2000 வரை இந்த தியேட்டரில் அதிக படங்களை நான் பார்த்திருக்கிறேன். தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 30 கிராமங்களுக்கான ஒரே ஒரு பொழுதுபோக்கு திரையரங்கம் ஸ்ரீதேவி தியேட்டர் மட்டுமே. நேற்று (19.04.24) எனது சொந்த ஊருக்கு வாக்களிப்பதற்காக இந்த திரையரங்கை கடந்து போகும் போது திரையரங்கம் முன்னாள் வைத்திருந்த மரங்கள் வெட்டப்பட்டிருந்தன மற்றும் திரையரங்கம் இடிக்கப்பட்டு ஒரே மண் குவியலாக காட்சிளித்தது மனதில் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்தி இந்த பதிவை போட வைத்துள்ளது. இந்த சினிமா கொட்டகையில் தரை டிக்கெட், பெஞ்ச், பேக்பெஞ்ச், சேர், சோபா என நான்கு வகை இருந்தது.   ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் புது படங்கள் போடப்படும் மற்றும் அதற்குண்டான ...

நஞ்சுண்ணும் பிள்ளைகள்

Image
என்னப்பா நஞ்சுண்ணும் பிள்ளைகள்னு தலைப்பு வச்சிருக்க. உன்பேரு நஞ்சப்பானு இருப்பதாலயா? என்று பலரது எண்ணத்தில் தோன்றும். இதோ விளக்கம் தருவதற்கு முன் எனது பெயர் பற்றி சொல்றேன் கேளுங்க. நஞ்சப்பா-நஞ்சு+அப்பா. நஞ்சு-விஷம், அப்பா-தொற்றாத. அதாவது விஷம் தொற்றாதவன் நான் என்று பொருள். சரி சரி கோவப்படாதீங்க. தலைப்புக்கு வருகிறேன். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஈஷாயோகா மையம் நடத்திய இயற்கை விவசாயத்தின் நுழைவு வாயில் என்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். எனக்கு சிறு வயது முதலே விவசாயம் செய்வதிலும் கால்நடைகள் வளர்ப்பிலும் அதீத ஆர்வமே இந்த நிகழ்வின் ஈர்ப்புக்கு காரணம். ஒரு நாள் பயிற்சி. 20 விதமான இடுபொருட்களை செலவில்லாமல் தயாரிப்பது எப்படி என்று கற்றுத்தந்தனர். நாம் சினிமாவைப் பார்த்துப் பழகிய ஆட்கள் அல்லவா! அடுத்த நாளே இனி விவசாயத்தில் குதித்துவிடவேண்டும், இயற்கை விவசாயம் செய்யவேண்டும், சூழல் காக்கவேண்டும் என்றெல்லாம் ஒரே சிந்தனையும் பூரிப்புமாக இருந்தது. ஆனால் எங்கே செய்வது என்று யோசித்தபோது மனம் சற்றே வாடிப்போனது. ஏனெனில் நான் இருப்பது பேராசிரியர் வேலையில், கரூர் நகரில். எனது சொந்த நிலம் இருப்...

ஆடு கோழி விலை உயர்வு ஓர் அலசல்

Image
கடந்த இரண்டு வருடங்களாகவே ஆடு மற்றும் கோழி விலை மற்றும் அதன் கறி விலை சற்று வேகமாக உயர்ந்து வருகிறது. வணிகவியல் பேராசிரியர் என்ற முறையில் இதை இரண்டு கோணங்களில் நான் பார்க்கிறேன்.  ஒன்று இதன் தேவை அதிகமாகிவிட்டது. இரண்டு வளர்ப்பு குறைந்து வருகிறது. இன்று மக்களின் உணவில் அசைவம் என்பது தவிர்க்க முடியாத இடத்தில இருப்பதாகவே நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் முன்பு வரை மக்கள் கோவிலுக்கு அதிகமாக போகவில்லை என்றாலும்,  நாள் கிழமை பக்தி என்று வாழ்ந்துவந்தனர். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, அமாவசை, கிருத்திகை என்று கடைப்பிடித்து அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர்.  அந்த நாட்களில் அசைவ உணவினை உட்கொண்டால் பெரிய தெய்வ குற்றம் நடந்து விடும் என்ற பயமும் பக்தியும் இருந்தது. இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வாழ்க்கைமுறை மற்றும் மேற்கத்திய கலாச்சார மோகம் என்பது அதீத அளவில் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை மாற்றியுள்ளது. ஆடு, மாடு, கோழி போன்றவை குடும்பத்தில் ஒரு நபராகப் பார்க்கப்பட்ட காலம் போய் அவை உணவாகவும் பணமாகும் பொர...

காணாமல் போகுமா விவசாயம்?

Image
இந்தகொரோனா நேரத்தில் இந்த தலைப்பைப் பற்றி எழுதுவது மிகவும் சரியானதாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் நமக்கு போதுமானது வெறும் உணவு மட்டுமே. எந்நேரத்திலும் தொற்று வரலாம், உயிர் போகலாம் என எண்ணி அரசே நம்மை வீட்டில் இருக்க உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கி நிற்க, கம்பீரமாக நிமிர்ந்து நிற்பது விவசாயம் தான். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த மானுட வாழ்க்கை முறையை விட இன்றைய வாழ்க்கை பல்வேறு கோணங்களில் மாறுபட்டுள்ளது. பல விளை நிலங்கள் கட்டடங்கள் மற்றும் கட்டிட நிலங்களாகவும் கூறு போடப்பட்டுள்ளது.  நீர் இல்லாமைக்கு காரணம் மரம் வளர்ப்பு இல்லாமை என்று சொல்லியே நம்மை நாம் ஆற்றுப்படுத்துகிறோம். பொதுக்கிணறு, பொது ஆழ்துழை இயக்குவிசைக் குழாய், குளம்  போன்ற நீர்நிலைகளை குறைவாகப்  பயன்படுத்தி வந்தநாம், இன்று வீடு தோறும் ஆள்துளைக் கிணறுகள் அமைத்து அதில் தண்ணீரை உறிஞ்சிவிடுகிறோம். தண்ணீர் இல்லாமல் வாழமுடியுமா என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் தோன்றுவது புரிகிறது. ஆனால் அதிகமான கட்டுபாடுகள் இல்லாததாலும் பேராசை மிகுந்த எண்ணத்தாலும் நிலத்தைத் துளையிட்டு ...

பழனியப்ப தாத்தா எனும் பாலம்

Image
இந்த தலைப்பைப் பார்த்த உடன் நான் ஒரு நபரைப் பற்றி மட்டுமே சொல்லப்ப போகிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல. சரி நான் சொல்ல வரும் தகவலை விவரிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊர் கொங்கர்பாளையம். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம். இங்கு பலதரப்பட்ட மக்கள் வழ்ந்தாலும் ஒற்றுமை என்பது இருக்கும்.  என் தாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இந்த ஐந்து பேருக்கும் நண்பனாக இருந்து அவர்களுக்குள் வரும் அனைத்து சண்டை சச்சரவுகளை சமாளித்து ஒற்றுமையை ஏற்படுத்திய பொறுப்பில் இருந்தவரே பழனியப்பா தாத்தா. உலகத்தில் எதார்த்தமான மனிதர்கள் இருந்தார்கள் என்றால் அது அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. யார் வீட்டிற்கு வந்தாலும் பாகுபாடில்லாமல் நமது குடும்ப உறுப்பினர் போலவே நடந்து கொள்ளும் பாங்கு அவரின் தனித்தன்மை. அவர் எங்களின் மூன்று தலை முறையோடு பாசமாகவும் பாலமாகவும் இருந்த மாபெரும் மனிதர். அனைவரையும் ஏசாமி என்று அவர் பாசமா அழைக்கும் குரல் இன்னும் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறது. பணம் மற்றும் பொருளுக்கு மதிப்பளிக்க...

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

Image
மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்தது. மனிதனின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் உதவியுடனே நடந்துள்ளது. மனிதன் தான் பிறந்த காலத்திலிருந்து நாடோடியாகவும், வேட்டையாடியாகவும் திரிந்தான். தனக்குத் தேவையானவற்றைத் தவிர, நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற உயிர்களைப்போலவே தானும் வாழ்ந்து வந்தான். நடந்து நடந்து ஓய்ந்தவனுக்கு, தான் இருக்கும் இடத்திலேயே உணவு கிடைத்ததால் அவனின் ஓட்டம் நின்றது. அங்கே தான் இயற்கைக்கு அழிவு ஆரம்பம் ஆனது.  ஓடியவன், மற்ற உயிர்களை பிடித்து வைத்தான். தான் வாழ வசதிகள் நிறைந்த இடத்தில் குடிசைகளை கட்டினான். அன்றைக்கு வேண்டும் என்ற எண்ணம் பெருகி நாளைக்கும் என்று எண்ணினான். பசிக்கு வேட்டையாடியவன், சேமிக்க வேட்டையாடினான். தேவைக்கு மேல் சேரும் போது, அவனுக்கு சிறிது சிறிதாக பேராசை தோன்றியது. நீரை சேமித்தான், தானியங்களை சேமித்தான், இவைகளை சேமிக்க சில உலோகங்களையும் மண் பண்டங்களையும் உருவாக்கினான். கடந்த நூற்றாண்டு வரைகூட, மனிதன் சேமிக்க மற்றும் பயன் படுத்த உலோகங்களையும் மண்ணையுமே பயன் படுத்தினான். தொலைக்கா...

உயிரா? மயிரா?

Image
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் என் மேல் சற்று வருத்தமோ, ஐயமோ வந்திருக்கும். என்னடா இவன் படித்தவன், பேராசிரியராக இருப்பவன் இப்படி பண்பில்லாமல் தலைப்பை வைத்திருக்கிறான் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இங்கே சொல்லியிருப்பதில் தவறில்லை. அதைத்  திருக்குறளில் திருவள்ளுவரே சொல்கிறார்.  "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" மயிர் என்பது தான் சரியான தமிழ்ச் சொல். நாம் தான் நாகரிகம் என்ற போர்வையில் சில தமிழ்ச் சொற்களை தவறான வார்த்தைகளுக்குப் பயன் படுத்தி வருகிறோம். சரி நான் சொல்ல வரும் தகவலுக்கு வருகிறேன். ஆடிமாதம், அருமையான குளிர்ந்த காற்று, நல்ல அமைதியான இரவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு ஓய்வு. புதன் (18.07.18) இரவு சரியாக 8.30 மணிக்கு நானும் என் மனைவியும் வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென யாரோ தான் செல்லும் வண்டியில் இருந்து விழுந்த இரைச்சல். நானும் எனது மனைவியும் ஓடிப்போய் பார்த்தோம். கிட்டத் தட்ட அறுபது வயது இருக்கும் பெரியவரும் அவரது மனைவியும் சா...